கோயம்புத்தூர், ஜூலை 21-கடவுள்களை தொழுகிற நேரத்தில் மற்றவர்களிடம்அன்பு காட்டினாலே போதுமானது என நடிகர் சிவக்குமார் வாசகர்கள் மத்தியில் உரையாற்றினார்.கோவையில் விஜயா பதிப்பகத்தின் வாசகர் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பங்கேற்று பேசியதாவது, ஒரு நடிகரான எனக்கு இலக்கியவாதி என்றதனித்த அடையாளம் எதுவும்இல்லை. இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று வருவதால் நூல் ஆர்வலர்கள்தான் அப்படிச் சொல்கின்றனர். எனது வாசிப்பு என்பது பெருங்கடலில் சிறு துளியைப் போன்றது. ஆனால்,நான் வாசித்ததை மற்றவர்களுக்குச் சொல்லி வருவதாலோ என்னவோ என்னை இலக்கியவாதி என்று அழைக்கின்றனர். பேராசிரியர் சாலமன் பாப்பையா கம்ப ராமாயணம் பற்றி பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், சில பாடல்களை மனப்பாடம் செய்து பேசினேன். பின்னர், ராமாயணம், மகாபாரதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இருப்பினும் இந்த காப்பியங்களை புரிந்து கொள்வதற்கு அதிக காலம் பிடிக்கும். இந்த புராணக் கதைகள் ஒருகாலத்தில் மிகச் சிறிய கதைகளாக இருந்தன. அடுத்தடுத்து வந்த எழுத்தாளர்கள் இவற்றை பெரும் காப்பியங்களாக்கிவிட்டனர். இவற்றை நான் பேசி வருவதால் கடவுளைக் கும்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. கடவுளைத் தொழுவதற்கு ஒதுக்கும் நேரத்தில், அனைவரிடமும் அன்பு காட்டி, அனைவரையும் சமமாக மதித்து, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த காப்பியங்களில் இருந்து மக்களுக்குஎவையெல்லாம் தேவையோ அவற்றையே நான் பயன்படுத்துகின்றேன். மக்களும் தங்களது வாழ்க்கைக்கு எவை பயன்படுமோ அவற்றை மட்டுமே தேடிப்பிடித்து படிக்க வேண்டும்.பாரதியாரும் இந்த காப்பியங்களை நல்ல கதைகள் என்றும்ஆனால் அவை நமது வாழ்க்கைக்கு உதவக் கூடிய கதைகள்என்றும் கூறியிருக்கிறார்.வடநாட்டு, தென்னாட்டு நூல்களில் ஒழுக்க நெறிகள் குறித்துமுரண்பாடுகள் இருந்தாலும், நமக்குத் தேவையானவற்றை மட்டும் அவற்றில் இருந்து எடுத்துக் கொண்டால் பிரந்சனைகள் எதுவுமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment